தலச்சிறப்பு:

இத்தலம் நான்குபுறமும் பசுமை நிறைந்த வயல் வெளிகளால் சூழப்பட்டுள்ளது. இத்தலத்தின் முன்பு சக்தி தீர்த்தம் எனப்பெயர் பெற்ற திருக்குளம் ஒன்று அமைந்துள்ளது.

அருணகிரிநாதரை வயலூருக்கு "வாவென" அழைத்து திருப்புகழ் பாட அடி எடுத்துக்கொடுத்த திருத்தலம் ஆகும். முருகன் இத்தலத்தில் தன் தாய் தந்தையர் ஆகிய ஆதிநாதர், ஆதிநாயகியை முன்னதாக வணங்கிய பின்னர் தான் தன் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.

இத்தலத்தில் அமைந்துள்ள நவக்கிரக சன்னதியில் ஸ்ரீ சூரியன். தனது தேவியர் சாயாதேவி மற்றும் உஷாதேவியுடன் மேற்கு நோக்கியும் ஏனைய எட்டு கிரகங்களும் சூரியனை நடுநிலையாக நோக்கியும் உள்ளன. தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்திப் பெற்றதும் நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் வேண்டி பூசைகள் செய்வது சிறப்பானதாகும். நீண்டகாலம் நடைபெறாமல் தடையாக இருந்த திருமணதோஷம் அகன்று திருமணம் நடைபெற இத்திருக்கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் செய்வித்தலால் திருமண தோஷம் நீங்கி திருமணம் கை கூடி நடைபெற்றுவருவது கண் கூடு.

தீர்த்தங்கள்:

முருகன் தன் வேலால் உருவாக்கப்பட்ட சக்தி தீர்த்தம் எனும் அழகுநிறைந்த திருக்குளம் திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது. கால சர்ப்ப தோஷம் நீக்கும் வல்லமை உடையது.

சதுர தாண்டவ நடராஜர்
சதுர தாண்டவ நடராஜர்

 
சக்தி தீர்த்தம்
     
     
சக்தி தீர்த்தம்